மாகாணமட்ட அகில இலங்கை பரதநாட்டியப் போட்டி 14.10.2023 அன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அதில் சிதம்பரக் கல்லூரி மாணவர்கள் ‘கவணாடல்’ குழுப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த கல்லூரியின் நடனபாட ஆசிரியர் திருமதி ஞானதர்சினி கிருபாகரன் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Saturday, October 14, 2023
Wednesday, October 11, 2023
சேவைநலன் பாராட்டு விழா
யா/ சிதம்பரக் கல்லூரியில் சேவையாற்றி மாற்றலாகிச் சென்ற ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா 11.102023 அன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் ஆசிரியர் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. கல்லூரியின் பிரதி அதிபர் திரு கு. மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வாழ்த்துரையை கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்களும் பாராட்டுரைகளை திருமதி ர. நந்தன், திரு கு. மனோகரன், திரு வே. சசிக்குமார், திருமதி சி. சிவபாஸ்கரன் ஆகியோரும் நிகழ்த்தினர். ஏற்புரையை ஆசிரியர்கள் சார்பில் திரு வே. பிரபாகரனும் நன்றியுரையை ஆசிரியர் ஊழியர் நலன்புரிச் சங்க செயலாளர் திரு சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினார். வாழ்த்துப் பாமாலையை ஆசிரியர்கள் வாசித்து வழங்கினர். மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்
Subscribe to:
Posts (Atom)