யா/சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் கல்லூரியில் தரம் 1 முதல் தரம் 13 வரை கற்கும் மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை கல்லூரி அதிபர் திரு வே.பரமேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர். அவை வகுப்பாசிரியர்கள் ஊடாக மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. எஸ் சிறீபதி அவர்கள் கலந்துகொண்டார்.
கல்லூரியின் பழைய மாணவர் வேலுப்பிள்ளை பாஸ்கரசுந்தரம் அவர்களின் 100,000/- ரூபா நிதிப்பங்களிப்பிலும் பழைய மாணவர் சங்கத்தின் 223,000/- ரூபா நிதிப்பங்களிப்பிலும் இந்த கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இவர்களுக்கு பாடசாலைச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.