Monday, March 6, 2023

மாணவருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு



   மூகத்தின் அபிவிருத்திக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருட்கள் தொடர்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் யா/சிதம்பரக் கல்லூரியில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 12.01.2023 அன்று மேற்படி விழிப்புணர்வுக் கருத்தரங்கை வல்வெட்டித்தறைப் பிரதேசத்திற்கான பொதுச்சுகாதார பரிசோதகர் திரு யோ. சகிந்தன் நிகழ்த்தினார். மேற்படி நிகழ்வை கல்லூரி பிரதி அதிபர் திரு கு. மனோகரன் அவர்கள் தொடக்கி வைத்து உரையாற்றினார். தரம் 9,10,11 மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்குபற்றினர். 

   மாணவர்களின் கற்றல், அவற்றுக்குத் தடையாக இருக்கும் காரணிகள், சமூகத்தில் ஒருவர் மதிக்கப்படுவதற்கான பண்புநலன்கள் தொடர்பில் மாணவர்களிடமிருந்தே வினாக்களை வினாவி அவர்களிடமிருந்தே விடைகளையும் வருவித்து மாணவர்களையும் பங்குபற்றுநர்களாக்கியதாக இக்கருத்தரங்கு அமைந்தது. 






No comments:

Post a Comment