Wednesday, March 1, 2023

நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும்

 

யா /சிதம்பரக் கல்லூரி நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 11.11.2022 அன்று கல்லூரி அதிபர் வேல்விநாயகம் பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் கல்லூரியின் பழைய மாணவியுமாகிய டாக்டர் வளர்மதி அம்பலவாணர் அவர்களும் சிறப்பு விருந்தினராக புத்தூர் ஶ்ரீசோமஸ்கந்த கல்லூரி உதவி அதிபர் திரு அ. பகீரதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.  நிறுவுநர்தின உரையை ஓய்வுநிலை அதிபர், கல்லூரியில் பழைய மாணவர் திரு பூ. சக்திவேல் அவர்கள் நிகழ்த்தினார். கல்வி மற்றும் இணைபாடவிதானச் செயற்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.  மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.






























No comments:

Post a Comment