Wednesday, December 6, 2023

WIN அமைப்பின் விழிப்புணர்வுச் செயற்பாடு


பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் WOMEN IN NEED தேவை நாடும் மகளிர் (WIN) அமைப்பினர் மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாட்டு நிகழ்ச்சியை 05.12.2023 அன்று யா/சிதம்பரக் கல்லூரியில் நிகழ்த்தினர். "பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு குற்றமாகும்" என்ற தொனிப்பொருளில் பெண்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்நோக்கும் வன்முறைகள் குறித்தும் அதன் பாதிப்புகள் குறித்தும் மாணவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

உரைகள் ஊடாகவும் நாடக அளிக்கையின்  ஊடாகவும் இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள். மாணவர்கள் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின் இறுதியில் மாணவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு கல்லூரி  சார்பில் ஆசிரியர் சு. குணேஸ்வரன் நன்றியுரை நிகழ்த்தினார். 


















No comments:

Post a Comment